Home மலேசியா அம்பாங்கில் நிலச்சரிவு, 15 வீடுகள் பாதிப்பு, மூவர் உயிருடன் புதையுண்டுள்ளனர் என அஞ்சப்படுகிறது

அம்பாங்கில் நிலச்சரிவு, 15 வீடுகள் பாதிப்பு, மூவர் உயிருடன் புதையுண்டுள்ளனர் என அஞ்சப்படுகிறது

பாண்டான் இண்டாவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் சேதமடைந்தோடு தாமான் புக்கிட் பெர்மாயில் வசிக்கும் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மாலை 6 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 15 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தாமான் புக்கிட் பெர்மாயில் உள்ளJalan Teratai 1/2J என்ற இடத்தில் நடந்தது. மாலை 6.54 மணியளவில் முதல் பாதிக்கப்பட்டவரை நாங்கள் மீட்டுள்ளோம். மேலும் மூன்று பேர் தற்போது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் நோரஸாம் காமிஸ் இன்று தெரிவித்தார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version