Home Hot News அம்பாங் நிலச்சரிவில் புதையுண்ட இரண்டாவது நபர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்

அம்பாங் நிலச்சரிவில் புதையுண்ட இரண்டாவது நபர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்

அம்பாங், மார்ச் 10 :

இங்குள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 2 நிலச்சரிவில் புதையுண்ட இரண்டாவது நபர், இன்று இரவு 7.53 மணிக்கு மீட்கப்பட்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட இரண்டாவதும் ஒரு பெண் என்றும் இந்த சம்பவத்தில் அவரது வீடு இடிந்து விழுந்ததில் அவர் புதையுண்டார் என்றார்.

அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மற்ற இருவரையும் மீட்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக, 15 வீடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் புதையுண்டதாக நம்பப்படுகிறது. அதில் மாலை 6.54 மணியளவில் புதையுண்டவர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version