Home மலேசியா சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது

ஷா ஆலாம், மார்ச் 12 :

சிலாங்கூரில் இன்று காலை தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்பார் எண்ணிக்கை 40 பேராக இருந்து, இன்று மாலை 5 மணி நேர நிலவரப்படி 31 பேராக குறைந்துள்ளது.

தற்போது 8 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள 3 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டனர்.

சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலின் அடிப்படையில், கம்போங் புக்கிட் சாங்காங் பொது மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது, அதைத் தொடர்ந்து செக்கோலா கேபாங்சான் (SK) ரங்காங்கன் தானா பெலியா (RTB)) புக்கிட் சாங்காங் (6 பேர்) மற்றும் பாலாய் ராயா கம்போங் ஒராங் அஸ்லி புக்கிட் தாடோம் (12 பேர்) போன்ற இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் மற்றும் 9 சிறுவர்கள் உள்ளனர் என்றும் அதே போர்டல் தெரிவித்துள்ளது.

இது தவிர, இது ஒரு ஆண் குழந்தை, நான்கு மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற நான்கு ஆண்கள் (OKU) ஆகியோரையும் உள்ளடக்கியது என்று குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version