Home மலேசியா ‘கைது வாரண்ட்’ தந்திரத்தை பயன்படுத்தி மோசடி கும்பல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது

‘கைது வாரண்ட்’ தந்திரத்தை பயன்படுத்தி மோசடி கும்பல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது

தொலைபேசி வழி மோசடி செய்பவர்கள் போலி கைது வாரண்ட்களை அனுப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற ஒரு புதிய பயமுறுத்தும் தந்திரத்தை கையாண்டுள்ளனர் என்று  வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கூட்டரசு சிசிஐடி இயக்குநர் கமிஷனர் டத்தோ கமருடின் முகமது டின் கூறுகையில் மக்காவ் ஊழல் கும்பல்கள் நீதிமன்ற அதிகாரிகள் அல்லது காவல்துறை அதிகாரிகளைப் போல போலியான தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைக்க புதிய யுக்தியைப் பயன்படுத்துகின்றனர் என்று இன்று கூறினார்.

கைது வாரண்டை நிறைவேற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட எந்தவொரு நபருக்கும் போலீசார் நகலின் புகைப்படங்களை அனுப்புவதில்லை. ஆனால் கைது செய்வதற்கு முன் அதை அவரிடமோ அல்லது அவளிடமோ நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

மோசடி அழைப்புகளைப் பெறும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும், மோசடி செய்பவர்கள் உருவாக்கும் சூழ்ச்சிக்கு விழ வேண்டாம் என்றும் கமாருதீன் பொதுமக்களை வலியுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version