கோவிட்-19 நிலையான இயக்க நடைமுறைகளில் தளர்வு குறித்து சுகாதார அமைச்சகம் புதன்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், அமைச்சகத்தின் திட்டங்களைப் பற்றி பிரதமரிடம் தெரிவித்ததாகக் கூறினார். இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “புதன்கிழமை அறிவிப்பை வெளியிடுவேன்.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கடந்த வாரம் மூன்று முக்கிய நடவடிக்கைகளில் தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று கூறினார். பொது இடங்களில் முகமூடி அணிவது, வளாகத்திற்குள் நுழையும்போது MySejahtera வழியாக செக்-இன் செய்ய வேண்டிய அவசியம் மற்றும் விமான நிலையங்களில் கோவிட் -19 கண்டறிதல் சோதனைகள்.
பண்டார் சுங்கலாவில் கோவிட் -19 க்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற ஐந்து குழந்தைகளைப் சந்தித்த பிறகு, கைரியின் அறிவிப்பு வந்தது.