Home மலேசியா 88ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் மலேசிய கடற்படைக்கு பேரரசர் வாழ்த்து

88ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் மலேசிய கடற்படைக்கு பேரரசர் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப்ரல் 27 :

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்கள், இன்று தனது 88 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் மலேசிய கடற்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இஸ்தானா நெகாரா, தனது முகநூல் கணக்கில் பதிவிட்ட அறிக்கையில், அனைத்து கடற்படை வீரர்களுக்கும், இதற்கு முன் பணியாற்றிய அனைவருக்கும் இவ் வாழ்த்துகளை மாட்சிமை தங்கிய பேரரசர் தெரிவித்ததாக கூறியது.

“நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் கடற்படை வீரர்களின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மிகவும் பாராட்டத்தக்கது.

“அனைத்துலக அரங்கில் மிகவும் மரியாதைக்குரிய கடற்படையாக நமது மலேசிய கடற்படை தொடரும் என்று நம்புகிறேன் என்றும் வாழ்த்துக்கள் என்றும் ” அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version