Home மலேசியா மே 8ஆம் தேதி புத்ராஜெயாவில் பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு

மே 8ஆம் தேதி புத்ராஜெயாவில் பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மே 8 அன்று புத்ராஜெயாவில் ஹரி ராயா 2022 திறந்த இல்ல உபசரிப்பை  நடத்துவார்கள்.

முகநூல் பதிவில், பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை லாமன் சாரி, ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து பங்கேற்பாளர்களும் கோவிட்-19  இறுதி கட்டத்திற்கு மாறுவதற்கு அமைக்கப்பட்ட சமீபத்திய நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOP) இணங்க வேண்டும். மேலும் முகக்கவசங்களை பயன்படுத்தவும், சமூக  இடைவெளியை பராமரிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று PMO தெரிவித்துள்ளது.

இந்த இடுகையில் ஆடைக் குறியீடு வழிகாட்டுதல்கள் மற்றும் நிகழ்விற்கான இலவச பேருந்து சேவைகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. தகவல்களின் அடிப்படையில், அனுமதிக்கப்படும் ஆடைகளில் ஸ்லீவ்ஸ், நீண்ட பேன்ட், முழங்கால்களுக்குக் கீழே ஓரங்கள் மற்றும் காலணிகள் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், ஷார்ட்ஸ், குட்டைப் பாவாடைகள், ஸ்லீவ்லெஸ் ஆடைகள், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் ஸ்லிப்பர்கள் போன்ற உடைகள் அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் உடை அணிய வேண்டும். ஆடைக் குறியீட்டிற்கு இணங்கத் தவறினால், ஶ்ரீ பெர்டானா வளாகத்திற்குள் நுழைவது மறுக்கப்படலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் PMO போர்டல் மற்றும் சமூக ஊடகங்களை அவ்வப்போது உலாவலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version