Home மலேசியா ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில், நால்வர் காயம்

ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில், நால்வர் காயம்

ஜோகூர் பாரு, மே 8 :

இங்குள்ள தாமான் அபாத்திலுள்ள ஒரு வங்கி அருகே, ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது, நால்வர் காயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 8) அதிகாலை 2.55 மணியளவில், சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமட் சுஹைமி ஜமால் தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் அபாத், ஜலான் ஹரிமாவ் தாருங் என்ற இடத்தில் விபத்து நடந்ததாகவும், 11 தீயணைப்பு வீரர்களும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“தமது குழு சம்பவ இடத்திற்கு வந்ததும், தீயினால் 40% எரிந்த நிலையில் இருந்த ஒரு காரைக் கண்டோம். அந்தக் கார் முன்பு மற்றய நான்கு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கியது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மே 8) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னரே பொதுமக்கள் தீயை அணைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்தில், எரிந்த காரில் இருந்து இருவர் மற்றும் விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்து இருவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் 26 மற்றும் 41 வயதுடையவர்கள் என்று முகமட் சுஹைமி கூறினார்.

“இதற்கிடையில், மற்ற மூன்று கார்களில் இருந்த மேலும் நான்கு பேர் காயமடையவில்லை,” என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Previous articlePengawal keselamatan ceroboh bilik hotel
Next articleநாட்டில் 900,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version