மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் இன்று நாட்டிலுள்ள அனைத்து பௌத்தர்களுக்கும் வைசாக் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாள் அனைத்து பௌத்தர்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரட்டும் என்று இஸ்தானா நெகாராவின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மரணத்தை நினைவுகூரும் வகையில் வைசாக் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.