Home மலேசியா கோலா கெடாவில் திடீர் வெள்ளம் ; நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிப்பு

கோலா கெடாவில் திடீர் வெள்ளம் ; நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிப்பு

அலோர் ஸ்டார், மே 16 :

இன்று நண்பகல் சுமார் 12 மணியளவில் கனமழை காரணமாக கோலா கெடாவில் உள்ள கம்போங் சீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 வீடுகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளச் சம்பவம் தொடர்பாக நண்பகல் 12.13 மணியளவில் தமது துறைக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் இதுவரை தற்காலிக வெள்ள நிவாரண மையம் (பிபிஎஸ்) ஏதுவும் திறக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜேபிபிஎம் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல முடிந்தது, ”என்று அவர் கூறினார்.

மேலும் அனைத்து சாலைகளும் வாகனங்கள் செல்லக்கூடியதாக உள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version