தானா மேரா, மே 18 :
இன்று அதிகாலையில், வங்கியின் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ATM) உடைக்கும் ஒருவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தச் சம்பவத்தை இன்று காலை 7.16 மணியளவில் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் கவனித்தபோது, மூன்று ஏடிஎம் இயந்திரங்களில் ஒன்று கீழே தேய்த்ததற்கான தடயங்களுடன், சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் வான் சுல்பிக்ரி வான் ஓத்மான் கூறுகையில், இன்று அதிகாலை 1.59 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்திற்குள் நுழைய ஒரு நபர் பிளாஸ்டிக் நாற்காலியுடன் நடந்து செல்வதை கண்காணிப்பு கேமராக் காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
“சந்தேக நபர் சாம்பல் நிற தொப்பி, சிவப்பு நீண்ட கை டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ், கையுறைகள் மற்றும் முகமூடி அணிந்திருந்தார்.
“ஏடிஎம் இயந்திர அறைக்குள் நுழைந்த பிறகு, சந்தேக நபர் தனது செயல்களைக் காணாதபடி பிரதான கதவில் எண்ணெய் பேப்பரை ஒட்டி, மற்றும் ஒட்டு நாடாவைப் பயன்படுத்தி சிசிடிவியை மூடினார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
வான் சுல்பிக்ரி கூறுகையில், வங்கிக்கு வெளியே உள்ள சிசிடிவி சோதனையின் அடிப்படையில், சந்தேக நபர் அதிகாலை 2.05 மணிக்கு ஏடிஎம் இயந்திர அறையை விட்டு வெளியேறி, 3.15 மணிக்கு மீண்டும் உள்ளே நுழைந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஏடிஎம் இயந்திரம் ஒன்றின் மூடிய கதவு, அரைக்கும் இயந்திரம் (grinding machine) பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் வெட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏடிஎம் இயந்திரத்தின் கதவிலும் ஒரு வெட்டு இருந்தது, ஆனால் அது கூட்டு எண் அமைப்பு வகையை பயன்படுத்தியதால் அவரால் திறக்க முடியவில்லை.
” ஏடிஎம் இயந்திரத்தின் கதவு திறக்கப்படாமல் அது சேதமடைந்தது, இருப்பினும், கணினி மூலம் சோதனை செய்ததில், இன்னும் 152,900 வெள்ளி இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
“அலுவலக நேரம் முடிந்ததும் ஏடிஎம் இயந்திரப்பகுதியில் பாதுகாவலர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை, மேலும் வங்கியில் நடந்த சோதனையின் அடிப்படையில், நள்ளிரவு 12 மணிக்கு தானாக மூடப்பட வேண்டிய ஏடிஎம் இயந்திர அறையின் பிரதான கதவு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து வேலை செய்யவில்லை என்று கண்டறியப்பட்டது.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் (KK) பிரிவு 380/511 இன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் இது தொடர்பான தகவல்களுடன் பொதுமக்கள் விசாரணையில் உதவ, எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.