Home உலகம் உக்ரைனின் மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்ய இராணுவம்

உக்ரைனின் மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷ்ய இராணுவம்

மாஸ்கோ, மே 21 :

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 87 ஆவது நாளை எட்டியுள்ளது.

மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்கியுள்ளதாகவும், அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ பாதுகாப்பு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்ய போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version