இந்தோனேசியாவின் தீமோர் பகுதியில் இன்று காலை 10.36 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அறிக்கையின்படி, இந்தோனேசியாவின் குபாங்கிலிருந்து வடகிழக்கே 425 கிலோமீட்டர் தொலைவில் 61 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
திணைக்களத்தின் ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.