பெட்டாலிங் ஜெயா, மே 29 :
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் 211 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய பத்து தொகுதி தலைவர் தியான் சுவாவை தோற்கடித்து, பத்து பிகேஆர் பிரிவின் புதிய தலைவராக வெற்றி வாகை சூடியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2022-2025 காலத்துக்கான பிகேஆர் கட்சித் தேர்தலில், தியான் சுவா 306 வாக்குகளும் பிரபாகரன் 517 வாக்குகளையும் பெற்றனர்.
கட்சியின் தேர்தல் குழுவால் சரிபார்க்கப்படும் வரை முடிவுகளில் இருந்து விலக்கப்பட்ட “சந்தேகத்திற்குரிய” வாக்குகள் அதாவது பிரபாகரனுக்கு 82 வாக்குகளும், தியான் சுவாவுக்கு 24 வாக்குகளும் பதிவாகியிருந்தன, இது முடிவில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.