Home மலேசியா சட்டவிரோதமாக கடன் கொடுத்ததாக நம்பப்படும் இருவர் போலீசாரால் கைது!

சட்டவிரோதமாக கடன் கொடுத்ததாக நம்பப்படும் இருவர் போலீசாரால் கைது!

கோலாலம்பூர், மே 30 :

சட்டவிரோத கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 29 அன்று  இரவு சுமார் 10.19 மணியளவில், டாங் வாங்கி சிசிஐடி அதிகாரிகள் 28 மற்றும் 36 வயதுடைய இருவரையும் கைது செய்ததாக, நகர வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் மகிதிஷாம் இஷாக் தெரிவித்தார்.

“ஜாலான் மேடான் துங்குவில் உள்ள ஒரு வங்கியிலும், ஜாலான் முன்ஷி அப்துல்லாவிலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திலும் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ” 40 வங்கி அட்டைகள், ஐந்து மொபைல் போன்கள், ஒரு சிபியு மற்றும் மானிட்டர், 11 வங்கி கணக்கு அறிக்கைகள், ஒரு கால்குலேட்டர், ஒரு நோட்புக், இரண்டு ரவுட்டர்கள் மற்றும் ஒரு செட் சாவிகளை கைப்பற்றினோம்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் 3,000 வெள்ளி ரொக்கப் பணத்தையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் கடனாளிகளின் ஏடிஎம் கார்டுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மாதாந்திர பணம் எடுக்கும் முகவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

“கடனாளி அவர்கள் கடன் வாங்கும்போது அவர்களின் ஏடிஎம் கார்டைக் கொடுப்பார், மேலும் கடன்கொடுத்த கும்பலுக்கு அவர் மாதாந்திர பணம் செலுத்துவார், அப்பணம் அவர்களின் ஏடிஎம் கார்ட் மூலமாக கடன் கொடுத்தவர்களால் எடுக்கப்படும். கடன் தீர்க்கப்பட்ட பின்னர் ஏடிஎம் கார்டுகள் திரும்ப அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

உரிமம் பெறாத கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, பணம் கடன் வழங்குபவர்கள் சட்டம் 1951 இன் பிரிவு 5(2) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இருவரும் ஜூன் 2 ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version