Home உலகம் வங்காளதேசத்திலுள்ள சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து; 16 பேர் பலி, 450 பேர் காயம்

வங்காளதேசத்திலுள்ள சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து; 16 பேர் பலி, 450 பேர் காயம்

டாக்கா, ஜூன் 5:

வங்காளதேசத்தில் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதிக்கு வெளியே, 40 கி.மீ தொலைவில் சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 450 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இத்தீ விபத்தில், 16 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்து குறித்து வங்காளதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் கூறியதாவது:-” 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட இரசாயனங்கள் இருந்ததாகவும் அக் கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர்
என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்ல, போலீசார் இதுதொடர்பில் மேலதிக விசாரணையை வருகின்றனர்” என்று கூறினார்.

Previous articleநான் இன்னும் ஸூரைடாவை சந்திக்கவில்லை’ என்கிறார் பிரதமர்
Next articleடாமன்சாரா உத்தாமாவில் மீண்டும் உரிமம் இல்லாமல் இயங்கிய இரவு விடுதி; போலீஸ் விசாரணை ஆரம்பம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version