Home மலேசியா 7 மாத கர்ப்பிணி துப்பாக்கி சூட்டுடன் இறந்து கிடந்த சம்பவம்

7 மாத கர்ப்பிணி துப்பாக்கி சூட்டுடன் இறந்து கிடந்த சம்பவம்

கோத்த பாரு, கம்போங் ரெபெக், பாசிர் மாஸில் காருக்குள் ஏழு மாத கர்ப்பிணிப் பெண்  வயிற்றில் இடது பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இறந்து கிடந்தார். பாதிக்கப்பட்ட 26 வயது தொழிலதிபர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவரது நிசான் செஃபிரோ காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கிளந்தான் காவல்துறையின் பொறுப்புத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

மாலை 4 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் ஓட்டுநர் இருக்கையில் கிடந்தார். காரை பரிசோதித்தபோது, ​​பின்பக்க பயணிகள் இருக்கை பகுதியில் தோட்டா உறை இருப்பதைக் கண்டோம்.

உடல் பிரேத பரிசோதனைக்காக பாசிர் மாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவரின் கார் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதாக ஒரு சாட்சியின் கூற்று படி அறியமுடிவதாக முகமட் ஜாக்கி கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக பாசீர் மாஸில் நேற்று இரவு 11.25 மணியளவில் 40 வயதுடைய நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதாக முமகட் ஜாக்கி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version