Home மலேசியா கொலை செய்து எரியூட்டப்பட்ட பவித்ரா திலக் வழக்கில் மேலும் 4 பேர் கைது

கொலை செய்து எரியூட்டப்பட்ட பவித்ரா திலக் வழக்கில் மேலும் 4 பேர் கைது

மே 31 அன்று பேராக்கில் உள்ள கம்போங் தாலாங் உலு அருகே உள்ள சுங்கை கோல் கங்சார் ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் கிடந்த  பவித்த் திலக் என்ற இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட கொடூரமான கொலை தொடர்பாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் 21 வயது காதலனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மாநில காவல்துறை தலைவர் மியோர் ஃபரிதலாத்ராஷ் வாஹித் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதுவரை, முதல் சந்தேக நபர் உட்பட ஐந்து நபர்களை நாங்கள் கைது செய்துள்ளோம் என்று அவர்  கூறினார்.

பேராக்கின் அரச நகரமான கோல கங்சரை உலுக்கிய வழக்கில் விசாரணை தொடர்வதால் சந்தேக நபர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் வழங்கவில்லை. பெண்ணின் படங்கள் மற்றும் டிக்டோக் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. மேலும் கொலைக்கான நோக்கம் பொறாமையாக இருந்ததாக ஊகங்கள் உள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், “அத்தகைய தகவல் எதுவும் தனக்கு வரவில்லை” என்று மியோர் கூறினார்.

தலையில் அடிபட்டதுதான் மரணத்திற்குக் காரணம் என்றும், பின்னர் அவர் எரிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கம்போங் தாலாங் உலுவில் உள்ள உள்ளூர்வாசி ஒருவரால் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலத்தின் அருகே ரத்த தடயங்களுடன் கூடிய கான்கிரீட் துண்டும் காணப்பட்டது. இது பெண்ணைக் கொல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version