Home உலகம் ஈரானில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரானில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் காயம்

கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில், தபாஸ் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர். விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து செயல்பட்டு, படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன. மேலும், 12 ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் மாகாணத்தின் மேலாண்மைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version