கோலாலம்பூர்: RM14,000 மதிப்புள்ள தாயின் நகைகளை களவாடிய பெண்ணுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூன் 13) தீர்ப்பளித்தது.
மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா ஆரிபின், பத்மா அப்துல்லா (36) என்பவருக்கு இந்த தண்டனையை விதித்தார். அவரது தாயார் ஆர். தேவி சேகர் (57) என்பவரின் ஒரு ஜோடி தங்கப் பதக்கங்கள், மூன்று தங்க நெக்லஸ்கள், மூன்று தங்க மோதிரங்கள், இரண்டு தங்கக் கல் பதக்கங்கள் மற்றும் ஒரு தங்க வளையலைத் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மார்ச் 13 ஆம் தேதி காலை 10 மணியளவில் கெப்போங்கின் Bandar Manjalara, உள்ள ஒரு வீட்டில் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 380 இன் கீழ், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். குற்றவாளிகளுக்கான தண்டனையை திங்கள்கிழமை முதல் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.