புத்ராஜெயா, ஜூன் 15 :
அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னான் ஆகியோர், பெர்சத்து கட்சியை விட்டு வெளியேறப்போவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று பெர்சத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
இவ் வதந்திகள் ஆதாரமற்றவை என்று விவரித்த முஹிடின், தான் முகமட் அஸ்மினுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் கட்சியின் போக்கு மற்றும் எதிர்காலம் குறித்து அடிக்கடி விவாதித்ததாகவும், ஹரி ராயாவின் போது முகமட் ரஷித்துடனான அவரது சமீபத்திய சந்திப்பில் அவர்கள் “கெத்துபாட் சாப்பிடுவது” பற்றி மட்டுமே பேசுவதாகவும் கூறினார்.
இதற்கிடையில், அமைச்சரவையில் பெருந்தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஜூரைடா கமாருடினின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தம்முடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வார் என்றும் முஹிடின் கூறினார்.