Home மலேசியா மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது -பிரதமர்

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது -பிரதமர்

நாட்டில் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை உயர்த்துவதில்லை என அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது. அதன்படி, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் தற்போது நிலையிலேயே இருக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த முடிவுடன், 5.8 பில்லியன் ரிங்கிட் மானியத்தை ஈடுகட்ட அரசாங்கம் உறுதியுடன் உள்ளது என்றார். அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் மற்றும் பிற உற்பத்தி செலவுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

இதன் அர்த்தம், அனைத்து உள்நாட்டு நுகர்வோருக்கும் ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு (kWh) இரண்டு சென் என்ற தள்ளுபடி பராமரிக்கப்படுகிறது மற்றும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படவில்லை. உள்நாட்டு நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை.

3.70 சென்/கிலோவாட் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவது உள்நாட்டு அல்லாத நுகர்வோருக்கு, அதாவது வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு பராமரிக்கப்படுகிறது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version