Home மலேசியா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் பலி

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் பலி

அலோர் காஜா, ஜாலான் செரானா பூத்தேவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தையும் அவரது மகனும் உயிரிழந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் உயிரிழந்தவர்களை அல்லாவுதீன் அப்துல் ஹமீத் (51) மற்றும் அவரது ஐந்து வயது மகன் முஹம்மது பத்ரோல் அல்லாவுதீன் (5) என அடையாளம் காட்டினார். அவர்கள் வீட்டிற்குள் ஒரு அறையில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அதிகாலை 1.56 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும், தீயை அணைக்கும் முயற்சியில் இருவரையும் அறைக்குள் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.

தீ விபத்தில் வீட்டின் 70% எரிந்து நாசமானது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீ விபத்தில் பலியான இருவர் கண்டுபிடிக்கப்பட்டதும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

Previous articleகேரி தீவு விபத்தில் 3 வெளிநாட்டவர்கள் பலி
Next article4,020 பேர் கோவிட் தொற்றினால் நேற்று பாதிப்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version