Home Top Story பனாமா நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து வித்தியாசமான முறையில் போராட்டம்

பனாமா நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து வித்தியாசமான முறையில் போராட்டம்

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் பனாமா நாட்டிலும் வெடித்துள்ளது. ஆனால் அந்த போராட்டத்தை எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களே கையிலெடுத்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை, உணவுப் பொருட்கள் விலை ஆகியவற்றை கட்டுப்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தினர்.

டிரம்ஸ்களை இசைத்து, ஆடல் பாடலுடன் போராட்டம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. உக்ரைன்-ரஷியா இடையிலான போரின் தாக்கம் உலக அளவில் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக எரிபொருள் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை தொடங்கி பாகிஸ்தான், நேபாளம், பிரேசில், அர்ஜெண்டினா, பெரு, அல்பேனியா என பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version