பத்து பஹாட், யோங் பெங்கில் உள்ள தாமான் புக்கிட் டிரோபிக்காவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று கழுத்தை நெரித்த காயங்களுடன் இறந்து கிடந்த 11 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என்று போலீசார் இன்று தெரிவித்தனர்.
பத்து பஹாட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோல்லாவை இன்று தொடர்பு கொண்டபோது, குழந்தையின் உடலில் பழைய காயங்கள் எதுவும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்
விசாரணைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் போலீசார் வழக்கு மேலும் விசாரித்து வருகின்றனர்.
வியாழன் மாலை 4.55 மணியளவில் பொதுமக்களால் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பாதிக்கப்பட்டவரின் 34 வயதான தாயார் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.