கோத்த கினபாலு, பாப்பாரில் உள்ள ஒரு மசூதி இன்று புதன்கிழமை (ஜூலை 27) அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதிகாலை 3.38 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள சபிந்தோவில் உள்ள நூருல் இமான் மசூதிக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டனர். எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
40×80 அடி மசூதி, 95% எரிந்துவிட்டது. அதிகாலை 4.26 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, மேலும் 07.17 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பேச்சாளர் கூறினார்.