Home மலேசியா பாலிங்கில் மீண்டும் வெள்ளம் – ஒன்பது குடும்பங்கள் இரு நிவாரண மையங்களில் தஞ்சம்

பாலிங்கில் மீண்டும் வெள்ளம் – ஒன்பது குடும்பங்கள் இரு நிவாரண மையங்களில் தஞ்சம்

அலார் ஸ்டார், ஆகஸ்ட் 3 :

நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாலிங்கில் உள்ள இரண்டு தற்காலிக நிவாரண மையங்களுக்கு ஒன்பது குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை துணை அதிகாரி லெப்டினன்ட் முகமட் துல்ஹைடி கலீல் தெரிவித்தார்.

தொடர்ந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி நடந்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

“இரவு 8.30 மணிக்கு திறக்கப்பட்ட செக்கோலா கே =பாங்சான் தெங்கு ஹப்சா நிவாரண மையத்தில் தற்போது ஐந்து குடும்பங்கள் வசிக்கின்றன, மேலும் நான்கு குடும்பங்கள் டேவான் துன் அப்துல் ரசாக்கில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றார்.

“மாலை 6 மணி முதல் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சுங்கை பாலிங் ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் நீர் நிரம்பி வழிகிறது,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version