Home மலேசியா சுல்தான் முஹம்மது IV ஸ்டேடியத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே சண்டை; மூவர் கைது

சுல்தான் முஹம்மது IV ஸ்டேடியத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே சண்டை; மூவர் கைது

கிளந்தான் மற்றும் பேராக் எஃப்சியின் 100க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு இடையே சுல்தான் முஹம்மது IV மைதானத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மூன்று கால்பந்து ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரீமியர் லீக் போட்டியில் கிளந்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக  கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஒரு பக்க ரசிகர் ஒருவர் மற்றொரு தரப்பினரைத் தூண்டியதால் சண்டை தொடங்கியதாக நம்பப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வீசப்பட்டதைக் காண முடிந்தது.

பேராக் கிளந்தான் எஃப்சியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிறகு மாலை 6.30 மணியளவில் மைதானத்திற்குள் இந்த சம்பவம் நடந்தது.

பேராக் ரசிகர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்தின் கண்ணாடி, கிளந்தான் ரசிகர்கள் கல்லால் தாக்கியதால் ​ சம்பவத்தில் அதன் கண்ணாடியும் சேதமடைந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version