கோத்தா பாரு, ஆகஸ்ட் 14 :
போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மூலம் 301 போதைப்பித்தர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் RM814,612.25 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆகஸ்ட் 11 முதல் நேற்று வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு புக்கிட் அமான் மண்டலம் 1 குழுவும் உதவியதாக கிளாந்தான் காவல்துறையின் பதில் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
அபாயகரமான மருந்துச் சட்டம் (ADB) சொத்து பறிமுதல் 1988 இன் கீழ், போலீசார் பல்வேறு வகையான வாகனங்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்ததாகவும், அதன் மொத்த மதிப்பு RM76,000 என்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த அளவு 70,125 போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்றும் கூறினார்.
“இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மூலம், நேற்று மாலை 6 மணிக்கு ஜாலான் JKR, பாசீர் மாஸில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது, RM27,780 மதிப்புள்ள கஞ்சா, ஹெரோயின், சைக்கோட்ரோபிக் மாத்திரைகள் மற்றும் எரிமின் மாத்திரைகள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 53 மற்றும் 34 வயதுடைய இருவரையும் கைது செய்தோம்.
“இரு சந்தேக நபர்களும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட கடந்தகால குற்றவியல் பதிவுகளை கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் மெத்தம்பெத்தமைன் போதைப்பொருளுக்கு சாதகமாக இருந்தனர்.
“இந்தக் கைதுக்குப் பிறகு, அதே நாளில் இரவு 7 மணியளவில் இங்குள்ள ஜாலான் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II, கம்போங் பாடாங் டெமிட்டில் உள்ள மேலும் ஒரு வீட்டை நாங்கள் சோதனை செய்தோம், அங்கு RM499,832 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் கண்டுபிடித்தோம்,” என்று இன்று கிளாந்தான் காவல்துறை தலமையக்கத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சந்தேகத்திற்குரிய இருவரும் ஆகஸ்ட் 13 முதல் 19 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர், மேலும் அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.