Home மலேசியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5 இலட்சம் வங்களாதேசிகள் மலேசியாவில் பணியமர்த்தப்படுவார்கள்

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5 இலட்சம் வங்களாதேசிகள் மலேசியாவில் பணியமர்த்தப்படுவார்கள்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 15 :

இரு நாடுகளும் கையொப்பமிட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 500,000 தொழிலாளர்கள் மலேசியாவில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மலேசியாவுக்கான வங்களாதேச தூதுவர் கோலம் சர்வார் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி, உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 53 வங்களாதேச தொழிலாளர்கள் அடங்கிய முதல் குழு கடந்த வாரம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்றார்.

இது தொடர்பில் மலேசிய மனித வள சங்கத் தலைவர், ஜரீனா இஸ்மாயில் கூறுகையில், பங்களாதேஷ் தொழிலாளர்கள் உற்பத்தி போன்ற சில துறைகளில் உள்ள இடைவெளியை நிரப்ப மட்டுமே உதவுவார்கள்.

“பெருந்தோட்டங்கள் போன்ற பிற துறைகளுக்கு மற்ற நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும்.

“மலேசியாவில் வேலை தேடுவதற்கு ஒப்புதலுக்காக ஏற்கனவே 23,000 இந்தோனேசிய தொழிலாளர்கள் காத்திருக்கும் வேளையில், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஆதார நாடாக வங்காளதேசம் மாறும் என்பதை ஒப்புக்கொள்வது கடினம் தான் ,” என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பரில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், வங்காளதேச தொழிலாளர்களை மலேசியாவிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இது டிசம்பர் 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசிய உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தலைவர் டான் ஸ்ரீ சோ தியன் லாய் கூறுகையில், மலேசிய முதலாளிகள் வங்கதேசத்தினரின் அதிக வேலை அர்ப்பணிப்பு காரணமாக அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விரும்புகின்றனர் என்றார்.

பெரும்பாலான வங்கதேச நாட்டவர்கள் விரைவாகக் கற்றுக்கொள்பவர்களாகவும், ஒத்துழைப்பவர்களாகவும், உள்ளூர் வேலைச் சூழலுக்கு விரைவாகத் தகவமைத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

“அவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய தயாராக உள்ளனர் மற்றும் எந்தப் பிரிவிற்கும் தொந்தரவு இல்லாமல் செயல்பாடாக கூடியவர்கள்,” என்றும் அவர் கூறினார்.

வேலை வாய்ப்பு ஏஜென்சிகள் சங்கத்தின் மலேசிய துணைத் தலைவர் சுரேஷ் டான் கூறுகையில், முதலாளிகள் கடின உழைப்பாளிகள், குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் இருப்பவர்கள் வங்களாதேசிகளை விரும்புகின்றனர்.

“அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்கள் விரைவாகப் பயிற்றுவிக்கப்படுவார்கள். ஆனால் பெருந்தோட்டத் துறையில் இந்தோனேசியர்களுக்கு நிபுணத்துவம் உள்ளது,” என்றார்.

மேலும் வங்காளதேசத்தினருக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தரப்படுத்தப்பட்டதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்றும் சுரேஷ் கூறினார்.

மலேசியாவின் SME சங்கத்தின் தலைவர் டத்தோ டிங் ஹாங் சிங் கூறுகையில், வங்களாதேச தொழிலாளர்கள் கடின உழைப்பாளிகள் என்பதால் தொழில்துறையினரால் வரவேற்கப்படுகிறனர்.

“மலேசிய முதலாளிகள் அவர்களை இங்கு வேலை செய்ய வரவேற்கிறார்கள், ஏனெனில் தொழிலாளர்கள் இல்லாமல், உற்பத்தியை அதிகரிக்கவும் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் முடியாது,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version