Home மலேசியா முஸ்லிமல்லாதவர்கள் குறித்து கருத்து கூறிய ஹாடியிடம் புக்கிட் அமான் விசாரணையை ஆரம்பித்துள்ளது

முஸ்லிமல்லாதவர்கள் குறித்து கருத்து கூறிய ஹாடியிடம் புக்கிட் அமான் விசாரணையை ஆரம்பித்துள்ளது

நாட்டில் ஊழலுக்கு முஸ்லீம் அல்லாதவர்களே காரணம் என்று சமீபத்தில் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியது தொடர்பாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக  இருக்கும் ஹாடிக்கு எதிராக 28 புகார்கள் வந்துள்ளதாக மத்திய போலீஸ் தலைமையகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. D5 எனும் இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மத மற்றும் இன உணர்வுகளைத் தொடும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்று காவல்துறை நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் ஏசிபி ஸ்கந்தகுரு ஆனந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 (c) இன் கீழ், எந்தவொரு வகுப்பினரையோ அல்லது நபர்களின் சமூகத்தையோ வேறு எந்த வகுப்பினர் அல்லது நபர்களின் சமூகத்திற்கு எதிராக ஏதேனும் குற்றத்தைச் செய்ய தூண்டும்  நோக்கத்திற்காக இந்த விஷயம் விசாரிக்கப்படுகிறது.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998ன் பிரிவு 233ன் கீழ், ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தும் உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்காக காவல்துறையும் இந்த விஷயத்தை விசாரிப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version