ஈப்போ, செப்டம்பர் 2 :
சுங்கை சிப்புட்டில் லோரி உட்பட 4 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
சோயா சோஸ் தொழிற்சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) நண்பகல் 1.53 மணியளவில் மூன்று கார்களும் ஒரு லோரியும் மோதிய விபத்து குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
“ஒரு காரில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொண்ட குடும்பம் காயமடைந்தது.
மற்றொரு காரில் இருந்த இரண்டு பெண்களில் 18 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் காயமடைந்தார்.
“இன்னுமொரு காரிலிருந்த மற்றொரு நபரும் காயமடைந்தார், அதே நேரத்தில் லோரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்,” என்று அவர் கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.