Home மலேசியா பேராக், மெங்கலெம்புவிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் பலி..!

பேராக், மெங்கலெம்புவிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் பலி..!

ஈப்போ, செப்டம்பர் 5 :

மெங்கலெம்புவில் உள்ள புக்கிட் மேராவில் இரண்டு வீடுகள் தீயில் எரிந்ததில், முதியவர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 5) அதிகாலை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட்தாகவும், பாதிக்கப்பட்டவர் லூ கின் சான், 78, என அடையாளம் காணப்பட்டதாகவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“காலை 5.25 மணிக்கு தீ விபத்து சம்பவம் தொடர்பில் எங்களுக்கு அழைப்பு வந்தது.

உடனே சம்பவ இடத்திற்கு தமது துறையினர் சென்றபோது, “இரண்டு வீடுகளும் சுமார் 80% எரிந்தன, அதே நேரத்தில் ஒரு கோவிலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இந்த தீவிபத்தில் சிக்கிய பாதிக்கப்பட்ட முதியவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்றும் மீட்பு நடவடிக்கை காலை 8.55 மணிக்கு முடிந்தது என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version