Home மலேசியா பினாங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் மூவர் கைது

பினாங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் மூவர் கைது

ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 8 :

போலீசார் மேற்கொண்ட தனித்தனி சோதனையில், போதைப்பொருள் கடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரை கைது செய்தனர், அவர்களிடமிருந்து RM7,1555 மதிப்புள்ள 200 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்ஜ் டவுன் மாவட்ட காவல்துறை துணை தலைவர், V. சரவணன் கூறுகையில், முதல் சோதனையில், மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) போலீஸ் குழு, கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 6) ஆயிர் ஈத்தாம் , பாடங் தெம்பாக் ஆகிய பகுதியில் சோதனை செய்து 45 வயதுடைய ஒருவரை மாலை 6.35 மணியளவில் கைது செய்தது.

​​”கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபரிடம் RM640 மதிப்புள்ள 18.4 கிராம் எடையுள்ள ஹெரோயின் அடங்கிய மூன்று பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்என்று, ஜார்ஜ் டவுன் போலீஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

முதல் சந்தேக நபரின் கைதினைத் தொடர்ந்து, போலீசார் மற்றொரு இடத்தை சோதனை செய்ததாகவும், ஆயிர் ஈத்தாம் எல்லைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் 47 வயது சந்தேக நபரை தடுத்து வைத்ததாகவும் V சரவணன் கூறினார்.

சோதனையின் போது, ​​RM1,565 மதிப்புள்ள சுமார் 44.8 கிராம் எடையுள்ள ஹெரோயின் அடங்கிய ஆறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர், சந்தேக நபர்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்ததாக போலீசார் நம்புவதாக அவர் கூறினார்.

மறுநாள் (செப்டம்பர் 7), ஹிலிர் பெமான்கார், தாமான் துன் சர்டானில் உள்ள ஒரு வீட்டில் 42 வயது சந்தேக நபரை போலீஸார் கைது செய்தனர் மற்றும் RM4,950 மதிப்புள்ள 141.4 கிராம் எடையுள்ள ஹெரோயின் என நம்பப்படும் 15 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சந்தேகநபர்கள் அனைவரும் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை உள்ளூர் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டவை எனவும் அவர் கூறினார்.

“சந்தேக நபர்கள் அனைவரும் செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 13 வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

மேலும் சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version