ஈப்போ, செப்டம்பர் 14:
பாரம்பரிய கட்டடங்களின் மேம்பாடு, பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது, தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஈப்போ நகர சபை வலியுறுத்துகிறது.
பேராக் பாரம்பரியங்கள் சங்கத்தின் தலைவர், முகமட் தாஜுதீன் முகமட் தாஹிர் கூறுகையில், இந்த சிறப்புக் குழுவில் பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் குறித்த நிபுணர்கள் போன்றவர்கள் இடம் பெறுவது நல்லது.
பினாங்கிலும் இதேபோன்ற குழு இருப்பதாகவும், அதை ஈப்போ பின்பற்ற வேண்டும் என்றார்.
“சிறப்புப் பகுதி வரைவுத் திட்டத்தில், பாரம்பரியக் கட்டிடங்களின் மேம்பாட்டிற்கான அனுமதிகள் வழங்கப்படுகையில், சூழல் சமநிலை இருப்பதை உறுதிசெய்வதற்காக இக்குழு செய்ற்படுகிறது.
“இக்குழு மூலம், ஒவ்வொரு முறையும் வளர்ச்சிக்கான விண்ணப்பம் இருக்கும்போது ஆர்.கே.கே.யில் என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
“உதாரணமாக, உயரத்தின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ப வெவ்வேறு விவரக்குறிப்புகள் உள்ளன, பின்னர் உள் மற்றும் வெளிப்புற காரணிகளையும் கவனிக்க வேண்டும்,” என்று அவர் புதன்கிழமை (செப். 14) கூறினார்.
தற்போது நகர சபையில் ஒரு குழு உள்ளது, ஆனால் அது திணைக்களத்திற்குள் இருப்பதாக முஹமட் தாஜுதீன் கூறினார்.
எந்தவொரு சிக்கலையும் தவிர்க்க, அத்தகைய விண்ணப்பங்களைச் செய்யும்போது விதிகளுக்கு மக்கள் கட்டுப்படுவதை உறுதி செய்வதில் இந்த சிறப்புக் குழு ஒரு பங்கை வகிக்க முடியும் என்று அவர் கூறினார்.