கூலாய், செப்டம்பர் 21 :
இங்குள்ள தாமான் சேனை ஜெயாவில் சம்மன் விதிக்க முயன்ற போலீஸ்காரரை கேலி செய்து, மிரட்டிய 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை (செப்டம்பர் 20) இரவு 9.20 மணியளவில் ஜாலான் சேனை ஜெயாவில், ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்துக்கு எதிராக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர், தோக் பேங் யோவ் தெரிவித்தார்.
“எங்கள் அதிகாரிகளில் ஒருவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேக நபர் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்துக்கு எதிராக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, தடுமாற்றமாக காணப்பட்டார்.
இதையடுத்து “எங்கள் போலீஸ் அதிகாரி விதிப்பதற்காக சந்தேக நபரின் அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு கோரினார், ஆனால் அவர் தகாத வார்த்தைகளால் எங்கள் அதிகாரியை ஏசினார்.
மேலும் “சந்தேக நபர் அதிகாரியின் பாதுகாப்பைக் கூட அச்சுறுத்தினார்,” என்று அவர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அவருக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை.
அவர் தற்போது வெள்ளிக்கிழமை (செப். 23) வரை மூன்று நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ், ஒரு பொது ஊழியரின் பணியை தானாக முன்வந்து தடுத்ததற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.