கோலாலம்பூர், செப்டம்பர் 24 :
கடந்த வாரம், அம்பாங்கின் பாண்டன் இண்டாவில் உள்ள வணிக மையத்தில் RM20,000 மதிப்புள்ள கேபிள்கள் திருடப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறுகையில், மூன்று சந்தேக நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் , உள்ளூர்வாசிகள் என்றும் கூறினார்.
முதலாமவர் பத்து 6, ஜாலான் கோம்பாக்கில், காலை 10.30 மணிக்கு கைது செய்யப்பட்டார். மற்றய இருவர் ஜாலான் ஏர் ஜெர்னே ஸ்தாப்பாக்கில் கைது செய்யப்பட்டனர் என்றார் .
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முதல் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு சாதகமான பதிவுசெய்தார், அத்தோடு போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட ஏழு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் மற்றய இருவரும் போதைப்பொருளுக்கு எதிர்மறையான பதிலை பெற்றதுடன் அவர்களுக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் லோரி மற்றும் கேபிள் விற்பனைக்கான ரசீது ஒன்றையும் போலீசார் கைப்பற்றியதாக முஹமட் பாரூக் கூறினார்.
24 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இவ்வழக்கு திருட்டு குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 379 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.