ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 26 :
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 24 வரை பினாங்கில் 595 டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 93.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மாநில சுகாதார இயக்குநர் டத்தோ மாரோஃப் சுடின் கூறுகையில், மாநிலத்தில் இதுவரை டிங்கி காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றார்.
புள்ளிவிவரப்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டிங்கி காய்ச்சல் பாதிப்புக்கள் எண்ணிக்கை, தொற்றுநோய்களின் போது மற்றும் அதற்கு முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளது, அதாவது 2020 இல் 806 பேர் பாதிக்கப்பட்டனர் மற்றும் 2019 இல் இது 3,574 பேராக பதிவாகியிருந்தது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏழு கிளாஸ்டர்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி வரை 42 டிங்கி கிளாஸ்டர்கள் பதிவாகியுள்ளன, மேலும் 42 கிளாஸ்டர்களில் 33 முடிவுக்கு வந்துள்ளன மற்றும் 9 கிளாஸ்டர்கள் இன்னமும் செயலில் உள்ளன.
அதே காலகட்டத்தில், மாநிலத்தில் 312,711 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வளாகங்கள் என நம்பப்பட்ட வளாக உரிமையாளர்களுக்கு RM222,500 மதிப்புள்ள 445 அபராதங்கள் மற்றும் தந்தங்கள் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
டிங்கி காய்ச்சல் தொடர்ந்து பரவி மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க, கொசு உற்பத்தியாகும் இடங்களை தடுக்கும் பொறுப்பை சமுதாயத்தின் அனைத்து மட்டத்தினரும் ஏற்க வேண்டும் என்றார்.