கூச்சிங், செப்.29 :
இங்குள்ள கம்பபோங் கூடே, ஜாலான் நானாஸ் பாராட்டில் உள்ள அவர்களது வீட்டில் திடீரென ஏற்பட்ட தீயில், சிக்கித் தவித்த மாற்றுத்திறனாளியான (OKU) சகோதரனைக் காப்பாற்ற, தனது உயிரை பணயம் வைத்து திரைப்பட நாயகன் போல மாறிய மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் இன்று இடப்பெற்றது.
இந்த தீ விபத்தின்போது, பாதிக்கப்பட்ட 27 மற்றும் 28 வயதான இருவர் உட்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் வீட்டில் இருந்தனர்.
தீ மூண்டதும், அவர்கள் அனைவரும் உடனடியாக தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர், ஆனால் ஊனமுற்ற சகோதரன் உள்ளே சிக்கிக் கொண்டார், இதனால் அவரது இளைய சகோதரர் அவரைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்து, அவரை மீட்டார்.
இந்த சம்பவத்தில் ஊனமுற்றவரது தம்பிக்கு 10 விழுக்காடு தீக்காயங்களும், அவருக்கு தலை, தோள்பட்டை மற்றும் கைகளில் 30 விழுக்காடு தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக சரவாக் பொது மருத்துவமனைக்கு (HUS) கொண்டு செல்லப்பட்டனர்.
சரவாக் தீயணைப்பு செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை 9.37 மணிக்கு வழக்கு பற்றிய அறிக்கை கிடைத்ததாகவும், பத்து லிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், படுங்கான் தீயணைப்பு நிலையம் மற்றும் பெட்ரா ஜெயா தீயணைப்பு நிலையத்தின் உறுப்பினர்களை சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் கூறினார்.
“நாங்கள் இடத்திற்கு வந்து பார்த்தபோது, இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்திருப்பது கண்டறியப்பட்டது. மற்றொரு வீடு சுவரில் தீப்பிடித்து எரிந்தது, மேலும் தீயணைப்பு வீரர்கள் தீ நான்காவது வீட்டிற்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்ந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்தன என்றும் அவர் கூறினார்.