Home மலேசியா மதராஸா மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்

மதராஸா மாணவர் ஆற்றில் மூழ்கி மரணம்

சிலாங்கூர், பந்திங்கில் உள்ள இஸ்லாமிய சமயப் பள்ளியின் (மதராஸா) மாணவர் ஒருவர் இன்று லங்காவியில் உள்ள லுபுக் செமிலாங் வனப்பகுதி பொழுதுபோக்கு பூங்காவின் ஆற்றில் மூழ்கி இறந்தார். கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் தலைவர், தீயணைப்பு கண்காணிப்பாளர் ஜமானி இஸ்மாயில் கூறுகையில், 15 வயது மாணவனின் உடல் காலை 11:40 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

சாட்சிகளின்படி, சிறுவன் 15 மற்றும் 16 வயதுடைய ஏழு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. சில நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.  ஆனால் அவர்களில் ஒருவர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை உதவிக்கு அழைக்கும் முன் அவர்களால் அம்மாணவரை காப்பாற்றுவதில் இருந்து தோல்வியடைந்தனர் என்று அவர் கூறினார்.

காலை 9:55 மணிக்கு துறைக்கு பேரிடர் அழைப்பு வந்தது, அதைத் தொடர்ந்து ஒரு குழு லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜமானி தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version