Home மலேசியா மலேசிய வரலாற்றில் ஒரு நாடாளுமன்றக் காலத்தில் மூன்று பிரதமர்கள்..!

மலேசிய வரலாற்றில் ஒரு நாடாளுமன்றக் காலத்தில் மூன்று பிரதமர்கள்..!

கோலாலம்பூர், அக்டோபர் 10 :

ஒரு நாடாளுமன்ற காலத்திற்குள் அல்லது 14வது பொதுத் தேர்தலுக்கு (GE14) பிந்தைய ஐந்து ஆண்டுகளில், மூன்று முறை மத்திய அரசு மாற்றப்பட்டு, மூன்று பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்த ஒரு புதிய வரலாற்றை மலேசியா பதிவு செய்துள்ளது.

மலேசியாவின் 9ஆவது பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நாடாளுமன்றக் கலைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, மீண்டும் 15வது பொதுத் தேர்தலின் பின் மத்திய அரசு மாறும்.

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பிரதமராக பதவி ஏற்று ஒரு ஆண்டும் 51 நாட்களும் இன்றுடன் முடிவடைகின்றன, “மலேசியாவை மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி செய்த பிரதமர்” என்ற வரலாற்றுப் பதிவில் இடம்பெறுகிறார்.

அவரைத்தொடர்ந்து இரண்டாவதாக மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி செய்த பிரதமராக முஹிடின் யாசின் (ஒரு ஆண்டும் 169 நாட்களும்) உள்ளார். அம்னோ அவருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டபின்னர், அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 இல் 14வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றி பாரிஷான் நேஷனலுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது, அப்போது பெர்சாத்து தலைவராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமட், PH இன் கூட்டணியுடன் சேர்ந்து 92 வயதில் நாட்டின் 7ஆவது பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியா மூன்று பிரதமர்களை ஆட்சியில் ஏற்றி, ஒரு புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version