Home மலேசியா நெடுஞ்சாலை விபத்தில் கார் தீப்பிடித்து மனைவி எரிவதை பார்த்து கதறிய கணவர்

நெடுஞ்சாலை விபத்தில் கார் தீப்பிடித்து மனைவி எரிவதை பார்த்து கதறிய கணவர்

ஜோகூர், கூலாய் Sedenak அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று நடந்த விபத்தில் காரில் சிக்கிய மனைவி தீயில் எரிவதைப் பார்த்து ஒருவர் கதறி அழுதார்.

RTM இன் அறிக்கையின்படி, வாகனம் ஓட்டிய அவரது கணவர், இடிபாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட போது, ​மனைவி காரில் சிக்கிக் கொண்டார்.

ஒரு வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, நெட்டிசன்களின் அனுதாபத்தைப் பெற்றது. துக்கமடைந்த நபருக்கு பொதுமக்கள் ஆறுதல் கூற முயற்சிப்பதை அது காட்டியது.

கார் மீது மோதியதாக கூறப்படும் லோரி மீதும் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கருத்துபடி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் காயமின்றி உயிர் தப்பினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version