Home Hot News 15வது பொதுத்தேர்தலில் சேவியர் ஜெயக்குமார் போட்டியிடவில்லை: அறிக்கை

15வது பொதுத்தேர்தலில் சேவியர் ஜெயக்குமார் போட்டியிடவில்லை: அறிக்கை

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 20 :

கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். சேவியர் ஜெயக்குமார் அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து வருவதாகவும், 15வது பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார் என்று தி வைப்ஸ் இணைய செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 இல் PKR கட்சியின் கீழ் கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர், அம்னோ மற்றும் பாஸ் வேட்பாளர்களை 17,112 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

மேலும் அவர் 2008 முதல் 2018 வரை ஸ்ரீ ஆண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

முன்னாள் PKR துணைத் தலைவரான டாக்டர். சேவியர், சமீபத்தில் பார்ட்டி பங்சா மலேசியாவில் (PBM) இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version