தீபாவளியை நாளை திங்கட்கிழமை (அக் 24) கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இடைக்கால பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்மாயில் சப்ரி தனது முகநூல் பதிவில், இது மக்களிடையே ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
விளக்குகளின் திருவிழா மேலும் ஒற்றுமையைக் கொண்டுவரும் மற்றும் மலேசிய குடும்பத்திற்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்பான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார்.