Home மலேசியா பினாங்கு முதல்வர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்

பினாங்கு முதல்வர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்

ஜார்ஜ் டவுன்: பினாங்கு முதல்வர் செள கோன் இயோவ் கோவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சனிக்கிழமை (நவம்பர் 5) பத்து கவான் நியமன மையத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 அன்று, தனக்கு கோவிட்-19 தொற்று உறுதி  செய்யப்பட்டதாக செள கூறினார்.

தற்போதைய கஸ்தூரிராணி பட்டு மீண்டும் போட்டியிட மறுத்ததை அடுத்து, பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தலைவராக இருக்கும் செள தனது கட்சியின் இடத்தைப் பாதுகாக்க  அத்தொகுதிக்கு அனுப்பப்பட்டார்.

Previous articleபுக்கிட் செடோங்கோல் பெர்டானா பாலம் இடிந்து விழுந்தது
Next articleவழிபாட்டுத் தலங்களை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம் – டத்தோ முகமட் சுக்ரி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version