Home மலேசியா அரசியல் டாமான்சாராவில் கோபிந்த் சிங் உட்பட மூன்று பேர் போட்டி

டாமான்சாராவில் கோபிந்த் சிங் உட்பட மூன்று பேர் போட்டி

கோலாலம்பூர், நவம்பர் 5 :

முன்னாள் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், 15வது பொதுத் தேர்தலில் (GE15) டாமான்சாராவில் போட்டியிடுகிறார்.

அவரைத் தவிர தேசிய முன்னணியின் கீழ் தான் கிம் துவான் (MCA), பெரிக்காத்தான் நேசனலில் இருந்து லிம் சி சிங் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில், டாமான்சாராவின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா கியாம் வீ 106,903 வாக்குகள் பெரும்பான்மையுடன் டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார், இது நாடு தழுவிய அளவில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பெரும்பான்மையாகும்.

டாமான்சாரா MCA பிரிவுத் தலைவராகவும் உள்ள தான், GE14 இல் கம்போங் துங்கு மாநிலத் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அவர் லிம் யி வேயால் (PKR) தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version