Home மலேசியா கிளாந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர் ஆகிய பகுதிகளுக்கு தொடர் மழை எச்சரிக்கை

கிளாந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர் ஆகிய பகுதிகளுக்கு தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், நவம்பர் 6 :

வரும் நவம்பர் 8 முதல் 11 வரை கிளாந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் தொடர் மழை எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.

பகாங்கின் குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின் மற்றும் ஜோகூரில் மெர்சிங் ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாட்டின் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இருக்கும் என்றும் கடந்த நவம்பர் 3 ஆம் தேதிமுதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அது முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version