Home Top Story நவம்பர் 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவிக்க அரசு திட்டம்

நவம்பர் 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவிக்க அரசு திட்டம்

GE15 தேர்தலுக்காக  வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கக்கூடிய வகையில் நவம்பர் 18-ஆம் தேதியை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

பெர்னாமாவின் படி, பிரதமர்  இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த முன்மொழிவு, ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

பேராக் டிஏபி தலைவர் ங்கா கோர் மிங் மற்றும் பொது மற்றும் சிவில் சேவைகளில் உள்ள ஊழியர்களின் சங்கங்களின் காங்கிரஸ் (கியூபெக்ஸ்) ஆகியோர் நவம்பர் 18 ஐ சிறப்பு பொது விடுமுறையாக  அறிவிக்க  புத்ராஜெயாவை வலியுறுத்தியது.  நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவும், நவம்பர் 15-ம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாரிசான் நேஷனல் தலைவர் அகமத் ஜாஹிட் ஹமிடியுடன் தான் நல்லுறவில் இருப்பதாகவும், இருவருக்குமிடையே எந்தவிதமான சர்ச்சைகளும் இல்லை என்றும் இஸ்மாயில்  கூறினார்.

அம்னோ துணைத் தலைவர், கட்சித் தலைமைக்குள்  பிளவுகள் ஏதும்  இல்லை என்றும்  ஊடகங்களில் வரும் செய்திகள்  எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட எதிர்மறையான கருத்து என்றும்  பிஎன்-ன் அறிக்கை யதார்த்தமானதாகவும், கூட்டணிக்கு  செயல்படுத்தக்கூடியதாகவும் இருந்தது  என்று  கூறினார்.

பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்று ஆட்சி  அமைத்தால், கூட்டணி  உறுதியளித்த  அனைத்து  முன்முயற்சிகளையும் நிறைவேற்றும்  என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version