ஜோகூர் பாரு, நவம்பர் 14 :
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 குடும்பங்களைச் சேர்ந்த 319 பேராக அதிகரித்துள்ளது, அவர்கள் தற்போது மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள எட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது நேற்று நள்ளிரவில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 266 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.