Home மலேசியா அரசியல் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தை அமைக்க பெரிகாத்தான் நேசனலுடன் இணைந்து பணியாற்ற தேசிய முன்னணி ஒத்துழைக்கும் என்கிறார்...

தேர்தலின் பின்னர் அரசாங்கத்தை அமைக்க பெரிகாத்தான் நேசனலுடன் இணைந்து பணியாற்ற தேசிய முன்னணி ஒத்துழைக்கும் என்கிறார் தக்கியுடின்

கோலாலம்பூர், நவம்பர் 15 :

15வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பெரிகாத்தான் நேசனலுடன் இணைந்து கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி ஒத்துழைக்க தயாராக இருப்பதாக, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் கூறினார்.

“நாங்கள் (PN) சொந்தமாகவோ அல்லது தேசிய முன்னணி போன்ற பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கூட்டணிக் கட்சிகள் தேவைப்பட்டாலும் நாங்கள் ஒருபோதும் பாக்காத்தான் ஹராப்பானுடன் உடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்பது நிச்சயமானது,” என்று அவர் நேற்றிரவு கிளாந்தானின் கெத்ரேவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்ச்சாரக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version